நுவரெலியாவின் அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக திகழும் நுவரெலியா தபால் நிலையத்தினை விற்பனை செய்வதற்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை (07) தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை தாங்கியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன், இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தபால் நிலையம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்தை சுற்றி கறுப்பு கொடி கட்டியும் , தேசிய வளங்களை விற்காதே என வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செ.திவாகரன்
