நுவரெலியா நகருக்குள் நடைபாதை வியாபாரத்துக்கு இடமளிக்கவே முடியாது!

 

நுவரெலியா நகரிற்கு உட்பட்ட பகுதிகளில் எக்காரணம் கொண்டும் நடைபாதை வியாபாரத்திற்கு சந்தரப்பம் வழங்க முடியாது. இது அரசாங்கத்தின் தேசிய கொள்கையை அமுல் படுத்துகின்ற செயல் திட்டம் என நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வரும் சட்டத்தரணியுமான சிவன் ஜோதி யோகராஜா தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட நடைபாதை வியாபாரிகள் ஒரு சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நுவரெலியா மாநகர சபையின் ஆணையாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணம் நடைபாதை வியாபாரிகளுக்கு நடைபாதையை பயன்படுத்தி வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

” இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நுவரெலியா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பொது மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்தனர். பாடசாலை மாணவிகள் நடைபாதையில் பயணிக்கின்ற பொழுது தமக்கு பல இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

பெற்றோர், பொது மக்களும் என்னுடைய காரியாலயத்திற்கு வருகை தந்து இது தொடர்பாக பல முறைப்பாடுகளையும் முன்வைத்துள்ளார்கள். எனவே நடைபாதை என்பது வியாபாரம் செய்வதற்கான ஒரு இடமல்ல. அது பொது மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு இடமாகும்.

மேலும் நுவரெலியா நகரம் என்பது சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தருகின்ற ஒரு இடமாகும். எனவே இங்குள்ள நடைபாதைகள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது.

எனவே இந்த விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். கடந்த காலங்களில் நுவரெலியா மாநகர சபை ஊடாக பல நடைபாதை வியாபாரிகளுக்கு வர்த்தக நிலையங்களை பெற்றுக் கொடுத்தாலும் இன்னும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

நாளுக்கு நாள் நடைபாதை வியாபாரிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரத்தை நிறைவு செய்துவிட்டு போகின்ற நேரத்தில் வீதி ஓரங்களில் கழிவுகளையும் பொறுப்பற்ற விதத்தில் அகற்றிவிடுகின்றார்கள். எனவே இது நகரத்தை சுத்தமாக பேனுவதற்கு பல இடையூறுகளை ஏற்படுத்துகின்றது. எனவும் பிரதி முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles