நுவரெலியா, பதுளை உட்பட 9 மாவட்டங்களில் ஜனாதிபதி முன்னிலை!

பொருளாதார யுத்தத்திற்கு முடிவு கட்டிய ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வைத்தியர ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் கூறியவை வருமாறு,

‘‘30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டி தேசிய பாதுகாப்பை உறுதி செய்தவர் மஹிந்த ராஜபக்ஷ. அதேபோன்று நாட்டிற்கு பொருளாதார பாதுகாப்பும் உணவு பாதுகாப்பும் சுகாதார பாதுகாப்பும் முக்கியமானது. கொவிட் தொற்றினால் 16 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஏனைய நாடுகளில் பெருமளவானவர்கள் உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேறியிருந்தனர்.

வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு தாய்நாட்டுக்கு வர நேரிட்டது. வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. இதனால் எரிபொருள், கேஸ், கொள்வனவு செய்ய பணம் இருக்கவில்லை. மின்உற்பத்திக்கான நிலக்கரி கொண்டுவர முடியவில்லை. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

பொருளாதார யுத்தத்திற்கு முடிவு கட்டிய ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் நன்றிக் கடன் செலுத்த வேண்டும். ரணில் விக்ரமசிங்க பதுளை, நுவரெலிய, மாத்தளை, யாழ்ப்பாணம். கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னிலையில் இருக்கிறார்.

வெனிசூலாவில் ஒரு இராத்தல் பாணுக்காக சண்டை பிடிக்கின்றனர். பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அனுபவமுள்ள தலைவர் கையில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். பரீட்சார்த்தம் செய்து பார்க்கும் காலம் இதுவல்ல” என்றார்.

 

Related Articles

Latest Articles