நுவரெலியா மாவட்டத்தில் கோப்பி பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்றது.
இதன்போது கோப்பி பயிர்ச்செய்கையை நுவரெலியா மாவட்டத்தில் எவ்வாறு அபிவிருத்தி செய்வது மற்றும் கோப்பி பயிர்செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் எஸ் .பி. திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், மாவட்ட செயலாளர் புஸ்பகுமார மற்றும் கோப்பி செய்கையாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.










