நேற்று மாத்திரம் 715 பேருக்கு கொரோனா – 7 பேர் உயிரிழப்பு!

2021 இல் கடந்துள்ள 33 நாட்களில் மாத்திரம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், கொரோனாவால் கடந்த மாதத்தில் மாத்திரம் 117 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்துள்ள இரு மூன்று நாட்களில் மாத்திரம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனாவால் நேற்று எழுவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 715 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

 

Related Articles

Latest Articles