மேற்குலக நாடுகளின் மிகப்பெரிய இராணுவ கூட்டணியான ‘நேட்டோவி’ல் அங்கம் வகிக்கும் நாடுகள் வரலாற்றில் முதன்முறையாக மிகப்பெரிய விமானப்படை பயிற்சியை ஐரோப்பாவில் ஆரம்பித்துள்ளன.
ஜேர்மன் விமானப்படையின் வழிநடத்தலில் Air Defender 23 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டு பயிற்சி நேற்று ஆரம்பமானது. எதிர்வரும் 23 ஆம் திகதிவரை பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.
உக்ரைன்மீதான தாக்குதலை ரஷ்யா விரிவுபடுத்தியுள்ள நிலையில், போர் பதற்றங்களுக்கு மத்தியில் இப்பயிர்சி ஆரம்பமாகியுள்ளமை அனைத்து தரப்புகளினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நோட்டோ உறுப்பு நாடுகளும், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ள சுவீடன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இதில் பங்கேற்றுள்ளன. சுமார் 250 இராணுவ விமானங்கள் இப்பயிற்சிகளில் பங்கேற்கின்றன என்று ஜேர்மன் விமானப்படை தெரிவித்துள்ளது. 10 ஆயிரம் வரையான படையினர் பயிற்சியில் களமிறங்கியுள்ளனர்.
