நோர்வூட்டில் சிசு சடலமாக மீட்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள நபரொருவர் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தின் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கௌசல்யா , செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles