நௌப்பர் மௌலவியா பிரதான சூத்திரதாரி? ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம்

21/4 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது அரசாங்கத்தினால் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் சர்வதேச சக்திகள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதுதொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பிரதான சூத்திரதாரி பற்றியும் இல்லை.

இந்நிலையில் தாக்குதல் நடைபெற்று 2 வருடங்கள் நெருங்கும்வேளை பிரதான சூத்திரதாரியொருவரின் பெயர் நேற்று திடீரென வெளியிடப்பட்டுள்ளது.  நௌபர் மௌலவி என்பவர் 2019 ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னினையில் சாட்சியளிக்கவில்லை. இது ஏன்?

கொழும்பு பேராயர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் பிரதான சூத்திரதாரி குறித்து கேள்வி எழுப்புவதால் அரசாங்கத்துக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்காகவே  நௌப்பர் மௌலவியின் பெயரை வெளியிட்டிருக்கலாம். ” – என்றார்.

Related Articles

Latest Articles