பசறை,கனவரல்ல பகுதியில் தந்தைக்கும், மகளுக்கும் கொரோனா!

பசறை பிரதேச சபைக்கு உட்பட்ட கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 3ஆம் திகதி 22 பேரிடம் மேற்கொள்ள பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் படி இன்று 36 வயதுடைய ஆணொருவருக்கும் 6 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் வீ. ராஜதுரை தெரிவித்தார்.

தொற்றாளர்கள் இருவரும் தந்தையும் மகளும் ஆவர். இவர்களை காகொல்ல தனிமைப் படுத்தல் முகாம்களுக்கு அழைத்து செல்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

செய்தி ராமு தனராஜா

Related Articles

Latest Articles