பசறையிலும் தேடுதல் வேட்டை – நால்வர் கைது!

பசறை பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதை மாத்திரைகளுடன் மூவரும் , கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

போதை மாத்திரைகளுடன் 27,25,21 வயதுடைய பசறை பதுளை வீதி 10 ம் கட்டை பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பசறை எல்டப் கீழ் பிரிவைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles