பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்கொல்ல கமயில் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அவரின் வழிகாட்டலுடன் சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைவந்தனர்.
வெல்கொல்ல கமயில் வயலுக்கு பின்னால் உள்ள சதுப்பு நில பகுதியில் அனுமதி ப்பத்திரம் இன்றி மிகவும் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்ட இரண்டு கஞ்சா செடிகளை ( ஒன்று உயரம்12 அடி
மற்றையது உயரம் 4 அடி) கைப்பற்றினர். அத்துடன், 65 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை இன்று பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி ராமு தனராஜா