பசறையில் மேலும் 9 பேருக்கு கொரோனா

பசறை பகுதியில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முடக்கப்பட்ட பிளானிவத்தை பெருந்தோட்ட இரு லயக்குடியிறுப்புத் தொகுதிகளில் 120 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன.

07-07-2021  பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை 09-07-2021ல் வெளியானபோது, ஏழுபேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. மேலுமிருவருக்கு சந்தேகத்தின் பேரில் ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவர்கள் இருவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

08-07-2021ல் பசறை பிளானிவத்தை பெருந்தோட்டத்தில் இரு லயக் குடியிறுப்புக்களிலிருந்து 11 பேர் தொற்றுக்கிழக்காகியதையடுத்து அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், இரு லயக் குடியிருப்புக்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

அவர்களில் 120 பேருக்கு (இன்று) 09-07-2021ல் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பசறை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

எம். செல்வராஜா, ராமு தனராஜா

Related Articles

Latest Articles