பதுளை – பசறை வீதி 8 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகனும் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பசறை, ரணுகல்ல பகுதியை சேர்ந்த 45 வயதுடைய தாயும், 22 வயதுடைய மகனுமே இவ்வாறு காயம் அடைந்துள்ளனர்.
பதுளை வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.