பசறை பகுதி பாடசாலையொன்றில் மாணவர்கள் 16 பேர் ஆசிரியர்கள் மூன்று பேர் உள்ளடங்களாக 19 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் இன்று (18) மு.ப 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை வளாகத்தில் இருந்த குளவி கூடொன்று கலைந்து மாணவர்களை சராமரியாக தாக்கி உள்ளது.










