பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா!

பசறை, கோணக்கலை காவத்தை தோட்டத்தில் பெண் ஒருவருக்கும், டெமேரியா பிரிவு மீதும்பிட்டிய பகுதி ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்த இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 23 ஆம் திகதிமேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரியின் அடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்
ராஜதுரை தெரிவித்தார்.

இவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles