பதுளை, பசறை கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை சுகாதார பிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இப்பகுதியில் இதற்கு முன்னர் எழு பேருக்கு கொரோனா தொற்றியது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் நால்வருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
நமது நிருபர்கள் தனராஜ் மற்றும் ஊவா சுரேன்
