பசறை – மடூல்சீமை வீதியில் விபத்து: நால்வர் காயம்!

ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

மடூல்சீமை பகுதியில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோவொன்று, பசறை – மடூல்சீமை வீதியில் 7 ஆம் கட்டை பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்ததில் சாரதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 41,38 வயதுடைய கணவன் மனைவியும் , மேற்குறிப்பிட்ட தம்பதிகளின் மகள் 17 வயதுடைய பெண்ணும் , 56 வயதுடைய சாரதியுமே இவ்வாறு பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நால்வரையும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பசறை வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles