update : படகு விபத்தில் காணாமல் போயிருந்த நால்வர் மீட்பு

update :

மாராவில், முஹூதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற காணாமல் போயிருந்த படகில் இருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று (18) மீன்பிடிக்கச் சென்ற குழுவினரின் படகு ஒன்று இன்று (19) அதிகாலை சுழலில் சிக்கி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் படகில் இருந்த நான்கு பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாராவில் மற்றும் துடுவா பிரதேசங்களை சேர்ந்த சிலவரும் ஜப்பானிய பிரஜை ஒருவருமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

………………………………….

மாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன படகின் உரிமையாளரால் இன்று (19) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 18ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் சிறிய டிங்கி படகில் கடலுக்குச் சென்றுள்ளனர்.

மீன்பிடிக்கும்போது மழை பெய்ததால் படகு கடலில் கவிழ்ந்தது.

படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகை ஓட்டி வந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

எனினும், இதன்போது படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles