பட்டாவத்த தமிழ் வித்தியாலயத்துக்கு புதிய கட்டிடம் – செந்தில் தொண்டமான் நடவடிக்கை

மடுல்சீமை, பட்டாவத்த தமிழ் வித்தியாலயத்துக்காக 100 லட்சம் ரூபா செலவில் புதியதொரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமையவே இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான நிதி ஏற்பாடுகளை பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பாடசாலைக்கு இன்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட செந்தில் தொண்டமான், கட்டிடத்தை பார்வையிட்டதுடன், மேலதிகமாக தேவைப்படும் வள வசதிகள் பற்றியும் கேட்டறிந்தார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.

Related Articles

Latest Articles