கொரோனா நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரச வைத்திய சங்கத்தின் பதுளைக் கிளைத் தலைவர் பாலித்த ராஜபக்ச தெரிவித்தார்.
“ பண்டாரவளை அரசினர் மருத்துவமனை வளாகத்தில்,மேற்படி கொரோனா நிலையப் பிரிவு இடம்பெறும். இப் பிரிவில் நூறு நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வகையில் நூறு கட்டில்கள் போடப்பட்டுள்ளன. 100 நோயாளர்கள் ஒரு தடவையில் சிகிச்சைப் பெறும் வகையில் அனைத்துவசதிகளும், இங்குமேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.
எம். செல்வராஜா ,பதுளை