ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இது தொடர்பான அறிவித்தலை அகில விடுத்துள்ளார்.
கட்சி மறுசீரமைப்புக்கு வழிவிடும் நோக்கிலேயே அவர் இவ்வாறு செய்தார் என கூறப்பட்டாலும் அதிருப்தி காரணமாகவே பதவி துறந்தார் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, ஐ.தே.கவின் புதிய பொதுச்செயலாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படக்கூடும் என அறியமுடிகின்றது.