பதுளையில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் துப்பாக்கிகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பதுளை பொலிஸார், வீற்றை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.
அருனுகொல்லை கிராமத்திலுள்ள வீடொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது. இத்தேடுதலின் போது கட்டிலொன்றிற்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டனர். அத்துடன், அத் துப்பாக்கிகளுக்கு உரிமையாளரென்று கருருதப்பட்ட இளைஞரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், விசாரணையின் பின்னர், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்த்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, பொலிசார் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை