பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (31) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை குறித்த தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 10 பேர் சந்தேகத்தின் பேரிலும், நீதிமன்ற பிடிவிறாந்து விதிக்கப்பட்ட 32 பேரும் போதைப் பொருள்களுடன் மூவரும் , சட்டவிரோத மதுபாவனை தொடர்பில் 11 பேரும் ,சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி ஒருவரும் வேறு போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் 37 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதுளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவின் ஆலோசனைக்கமையவே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
