மலையகத்திலுள்ள பிரதான இரு தொழிற்சங்கங்களின் தோட்ட தலைவர்கள் இருவர் உட்பட 10 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பதுளைப் பகுதியின் பள்ளக்கட்டுவை பெருந்தோட்டத்திலேயே இன்று முதல் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி இரு தோட்டங்களில் இரு யுவதிகள், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களாவர். இவ்விருவரும் பி.சி.ஆர். மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆரம்பப் பரிசோதனையில் கோவிட் 19 தொற்று இல்லை என்பது உறுதியானது.
இதனைடுத்து அவ்விருவரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்தி, அவ் யுவதிகளின் வீடுகளுக்கு, பள்ளக்கட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்நிலையில் பள்ளக்கட்டுவை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்கள், குறிப்பிட்ட இரு யுவதிகளையும், அவர்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும் இரு வாரங்களுக்கு கோவிட் 19 நோய்த் தொற்று சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருக்குமாறு, கண்டிப்பான உத்தரவினைப் பிறப்பித்தனர்.
அவ் உத்தரவிற்கமைய குறிப்பிட்ட இருவரின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தல் அறிவித்தல் காட்சிப்படுத்தி, சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்விரு யுவதிகளும், தோட்டமட்டத் தலைவர்களின் புதல்விகளாவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா பதுளை