பதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு வீடுகள்!

பதுளை மாவட்டத்தில் மண்சரிவுபோன்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் 250 குடும்பத்தினருக்கும்  வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளைமாவட்ட இணைப்பாளர் சன்ஜீவ சமரக்கோன்,மேற்படித் தகவல்களை வழங்கினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுதற்காலிகமான கூடாரங்களிலும், உறவினர் வீடுகளிலும் வசித்துவரும் 250 குடும்பங்களுக்கு நிருமாணிக்கப்படும் வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. இடர் முகாமைத்துவ நிலையம்  இவ் வீடுகளை அமைக்கவுள்ளது.

எம். செல்வராஜா

Related Articles

Latest Articles