பதுளை மாவட்டத்தில் 404 வீடுகள் முழுமையாகவும், 7,291 வீடுகள் பகுதியளவும் சேதம்!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் பதுளை மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.11 பேர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

404 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்து 291 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

5ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 750 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயலை அடுத்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 436 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles