பதுளை வலய மட்ட ஆங்கில தினப் போட்டியில் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயம் முதலிடம்

பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ், சிங்கள மொழி மூலப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பதுளை வலய மட்ட ஆங்கில மொழித் தினப் போட்டியில் பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன் ஊவா மாகாண மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ளனர்.

இதன்படி, கை எழுத்து (பிரிண்ட் ஸ்கிரிப்ட் ) போட்டியில் தரம் -04 மாணவன் ஏ.அம்சிக்க உமேசன், தரம்-05 மாணவன் எம். மிரோன், தரம்-03 மாணவன் எம்.ஜே. ஜாசிம் ஆகியோர் முதலாம் இடங்களைப் பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர். கவிதைப் பாராயணம் போட்டியில் தரம்-03 மாணவன் ஜெ.ஆர்.எஃப். ஜேம்ஸ் அன்டனி 03 ஆம் இடத்தையும், தரம்- 05 மாணவன் எம்.மிரோன் 02 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுடன் பாடசாலையின் அதிபர் கே. மகேந்திரன், உப அதிபர் திருமதி. ஜே.எஸ்.விஸ்வம், மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆங்கிலப் பாட ஆசிரியைகளான திருமதி .டீ.ஏ.எஃப். ரினோஷா, திருமதி. பீ.தனூஜா ஆகியோரையும் படத்தில் காணலாம்.

பசறை நிருபர்

Related Articles

Latest Articles