பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கெலிபனாவல, கலபொட மலைப்பகுதியில் இன்று முற்பகல் ஏற்பட்ட பாரிய மண்சரிவால் 11 வீடுகள் சேமடைந்துள்ளன.
குறித்த பகுதியில் வசித்த 31 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேர் நேற்று வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இடம்பெயர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.










