கொட்டகலை, பத்தன நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதமடைந்துள்ளன என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.
மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழைபெய்துவருவதால் மண்சரிவு அனர்த்தங்களும் ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு (18.09.2020) பத்தன நகரிலும் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டது.
வீடுகள் மற்றும் தொழிற்சங்க அலுவலகத்துக்கு பின்புறத்திலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், இரு வீடகளில் இருந்த எட்டு பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அதேவேளை, இன்று காலை முதல் மலைநாட்டில் இடையிடையே மழைபெய்துவருகின்றது. தொடர் அழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
க.கிசாந்தன்