சப்புகஸ்கந்த பகுதியில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண், கொலை செய்யப்பட்ட பின்னரே அவ்வாறு வீசப்பட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகள்மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், கொலையாளிகளையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 44 வயதுடைய முஸ்லிம் பெண்ணொருவர், கடந்த 28 ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
கொழும்பு, புளுமண்டல் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் அவரின் சகோதரர் சகிதமே குறித்த பெண் ஆட்டோவில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் சப்புகஸ்கந்த எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள கழிவுப் பொருட்களுடன் காணப்பட்ட பயணப் பைக்குள் இருந்து அவர் நேற்று முன்தினமாக சடலமாக மீட்கப்பட்டார்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீடக்ப்பட்டிருந்தது. இது தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தனர். இப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவருடன் பணித்த இருவரும் தலைமறைவாகியுள்ளனர். உயிரிழந்துள்ள பெண் வட்டிக்கு பணம் கொடுப்பவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுபவர் எனவும் தெரியவந்துள்ளது.