பருப்பு – கோதுமை அதிக விலையில் விற்கப்படுகின்றன!

ஒரு கிலோ பருப்பின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ பருப்பின் விலை 30 முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், சில கடைகளுக்கு கோதுமை மாவு வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றன.

சீனிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டிருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட மொத்த விலையில் சீனி வழங்குவதை வரையறுத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார்.

கோதுமை இறக்குமதி நிறுவனங்களுக்கும், ஜனாதிபதி செயலாளர் மற்றும் நிதி செயலாளர் ஆகியோருக்கும் இடையில் விலை அதிகரிப்பு கோரிக்கை குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து குறித்த நிறுவனங்கள் கோதுமை மா விலையினை அதிகரிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெதுப்பக உற்பத்திகளுக்கான கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles