நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம்மீது நம்பிக்கை வைக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எண்ணிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டே பட்ஜட் முன்வைக்கப்படும். சில மக்கள் நலத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவை அமுலுக்கு வராது. எனவே, நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்வைக்கப்படவுள்ள பட்ஜட்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களிடமிருந்து எதையாவது பறிப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.”- என்றார்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்ல. முறையான விசாரணைகளும் இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாட்டு மக்களும் உள்ளனர் எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.