இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும், இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்குமிடையில் நேற்று தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை பஸில் ராஜபக்ச நாளை முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் இராஜதந்திர வட்டாரங்களில் பலகோணங்களில்
பேசப்படுகின்றது.
பஸில் ராஜபக்சவுடனான உரையாடல் சிறப்பாக அமைந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.