பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான விதிமுறை 90% அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பெரும்பாலான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும், பொதுமக்களும் இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறிப்பிட்ட சில பகுதிகளில், குறிப்பாக அலுவலக நேரங்களில், ஆசன எண்ணிக்கைகளை விடவும் அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக தெரிவித்தார்.