பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவல பகுதியில் இன்று (02) பிற்பகல் பஸ்ஸொன்றும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொஸ்லாந்தையிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இபோச பஸ், ஹாலிஎல பகுதியில் இருந்து பண்டாரவளை பக்கமாக சென்றுகொண்டிருந்த ஆட்டோவுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனால் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் ஹாலிஎல உடுவர பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் அதிக வேகமே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் சாரதியை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராமு தனராஜா