பஸ் சில்லில் சிக்கி 17 வயது இளைஞன் பலி!

எம்பிலிபிட்டிய – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த குறித்த இளைஞர் உயிர் தப்ப வெளியே பாய்ந்த போது பஸ் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 17 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் இவ் விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles