பாடகர் எஸ்பிபியின் வெண்கல சிலை ஹைதராபாத்தில் திறப்பு

மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்​ரமணி​யத்​துக்கு ஹைத​ரா​பாத்​தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உரு​வச்​சிலை திறக்கப்பட்டது.

பிரபல பின்​னணிப் பாடகர், நடிகர், இசையமைப்​பாளர், தயாரிப்​பாளர் என பன்​முகங்​களைக் கொண்​ட​வர் எஸ்பி பாலசுப்​ரமணி​யம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில் ஹைத​ரா​பாத்தில் உள்ள ரவீந்​திர​பாரதி வளாகத்​தில் எஸ்​பிபி-​யின் சிலையை முன்​னாள் குடியரசு துணைத்​தலை​வர் வெங்கையா நாயுடு , ஹரி​யானா முன்​னாள் ஆளுநர் பண்​டாரு தத்​தாத்​ரே​யா ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆந்​தி​ரா​வின் கிழக்கு கோதாவரி மாவட்​டத்​தில் எஸ்​பிபி​யின் 7.2 அடி உயர வெண்கல சிலை உரு​வாக்​கப்​பட்​டது. நின்ற நிலை​யில் உள்ள எஸ்​பிபியின் சிலைக்கு தங்க வர்​ணம் பூசப்​பட்​டிருந்​தது.

இவ்விழா​வில் அமைச்​சர் ஸ்ரீதர் பாபு, தெலங்​கானா பாஜக தலை​வர் ராமசந்​தர் ராவ், எஸ்​பிபி​யின் மனை​வி, பாடகரும் அவரது மகனு​மான எஸ்​பிபி சரண், தங்கை எஸ்பி சைலஜா, அவரது குடும்​பத்​தார்​பங்​கேற்​றனர்.

Related Articles

Latest Articles