பொதுத்தேர்தலினை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. க
கடந்த 27ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகும்.