பாடசாலை மாணவிகளுக்கு அடுத்தவருடம் முதல் இலவச சுகாதார நாப்கின்!

பாடசாலை மாணவிகளுள் சுகாதார நாப்கின் (Sanitary towels) தேவைப்படுவோருக்கு அதனை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

முதற்கட்டமாக 3 லட்சம் மாணவிகளுக்கு அடுத்தவருடம் முதல் சுகாதார நாப்கின்கள் வழங்கப்படும் எனவும், அதன்பின்னர் இந்த எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தரம் 6 இற்கு மேல் 12 லட்சம் மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அவர்களில் 10 லட்சம் பேருக்கு சுகாதார நாப்கின் தேவைப்படலாம். முதற்கட்டமாக சிஎஸ்ஆர் திட்டத்தின்கீழ் 3 லட்சம் மாணவிகளுக்கு வழங்கப்படும். இதில் கிராமிய பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதிர்காலத்தில் அரச நிதியும் பயன்படுத்தப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles