வரவு – செலவுத் திட்டத்தில் உள்ள சிறந்த முன்மொழிவுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்தார்.
” வரவு – செலவுத் திட்டத்தில் நல்ல விடயம், கெட்ட விடயம் என இரு பக்கங்கள் உள்ளன. நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்கப்படும். உரிய வகையில் செயற்பட்டால் பாதீட்டில் உள்ள முன்மொழிவுகளை முழுமையாக அமுல்படுத்தலாம்.” – எனவும் மஹிந்த ராஜபக்ச கூறினார்.
