பாதீடு – திருத்தங்களை முன்வைக்க தயாராகிறது சுதந்திரக்கட்சி!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்து, அதனை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கும், பாதீட்டில் முன்வைக்கப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றி ஆராய்வதற்காகவே விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், இது சாதகமான பாதீடு என சுட்டிக்காட்டியிருந்தனர். எனவே, அவர்களை பாதீட்டை ஆதரிப்பது உறுதி. எனினும், சில திருத்தங்களை முன்வைக்கலாம். அதற்காகவே கூட்டம் கூடுகினறது எனவும் தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles