‘பாராளுமன்றம் வருகை’ – கோரிக்கையை நிராகரித்தாரா பஸில்?

” பாராளுமன்றம் வருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல தரப்பினரும் பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை அவர் நிராகரிக்கவில்லை. எனவே, சாதகமான அறிவிப்பை விரைவில் விடுப்பார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

பஸில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை தொடர்பில் இன்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பஸில் ராஜபக்ச அரசியல் ரீதியாகவும் பலம்பொருந்திய நபர். பழமையான ஐந்து கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு மொட்டு கட்சியை முதலிடத்துக்கு கொண்டுவந்தார். குறுகிய காலப்பகுதியில் ஆட்சியை பிடித்ததுடன், எமது கட்சியிலிருந்து ஜனாதிபதியும் உருவாகினார். எனவே, அவ்வாறானதொரு நபர் பாராளுமன்றம் வருவதற்கு பிரத்தியேக பிரச்சாரம் தேவையில்லை. அவர் நிச்சயம் வரவேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles