” இந்திய Zee Tamil (ஜி தமிழ்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்வில் புசல்லாவை, நயாபன தோட்ட சிறுமியான அசானி பங்கேற்றுள்ளார். மலையக மக்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர் பாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடிவேல் சுரேஷ் எம்.பி., அசானியை பாராட்டி பேசினார்.
” 1982, 1992 பற்றி மாத்திரம் தற்போது பேச முடியாது. மலையகத்தில் திறமையானவர்கள் உள்ளனர், கல்விமான்கள் உருவாகியுள்ளனர்.” எனவும் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, தலைமன்னாரில் இருந்து மாத்தளைவரை முன்னெடுக்கப்பட்டுவரும் மலையக எழுச்சி பாத யாத்திரைக்கும் அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
