” பாராளுமன்றில் ஒலித்தது மலையக குயில் அசானியின் பெயர்”

” இந்திய Zee Tamil (ஜி தமிழ்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்வில் புசல்லாவை, நயாபன தோட்ட சிறுமியான அசானி பங்கேற்றுள்ளார். மலையக மக்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர் பாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடிவேல் சுரேஷ் எம்.பி., அசானியை பாராட்டி பேசினார்.

” 1982, 1992 பற்றி மாத்திரம் தற்போது பேச முடியாது. மலையகத்தில் திறமையானவர்கள் உள்ளனர், கல்விமான்கள் உருவாகியுள்ளனர்.” எனவும் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, தலைமன்னாரில் இருந்து மாத்தளைவரை முன்னெடுக்கப்பட்டுவரும் மலையக எழுச்சி பாத யாத்திரைக்கும் அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

Related Articles

Latest Articles