பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமா? நாளை முடிவு!

பாராளுமன்ற, சபை நடவடிக்கைகளையும், ஆலோசனை குழு கூட்டங்களையும் தொடர்ந்து நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது தொடர்பில் நாளை (7) நடைபெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  பாராளுமன்ற கட்டடத்தொகுதியிலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இன்று (6) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கொரோனா தாக்கம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போதே கொரோனா சுகாதார நிலைமைகளை கணக்கில் எடுத்து நாளை தீர்மானம் எடுக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles