இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
இரு நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி நேற்றிரவு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்நிலையில் அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது மீனவர் விவகாரம், இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
