பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி: 60 இற்கு மேற்பட்டோர் பலி!

 

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 66 மேற்பட்டோர் பலியாகினர்.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியட்நாம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Latest Articles