‘பீசீஆர் பரிசோதனை மட்டுமே – சீனக்குழுவினர் தனிமைப்படுத்தப்படமாட்டர்’

சீன தூதுக்குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். பீசீஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே இங்கு வருகின்றனர். எமது நாட்டில் வைத்தும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒருநாள் பயணமே மேற்கொள்கின்றனர்.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் இன்று (8) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சீனக்குழுவினரின் இலங்கை பயணம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 
அதேவேளை, உரிய சுகாதார நடைமுறை பின்பற்றியே சந்திப்புகள் நடைபெறவுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதன்போது குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles