கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை, புபுரஸ்ஸை நகரை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் வெற்றிகரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
புபுரஸ்ஸை நகரிலுள்ள பஸ் நிலையத்தை புனரமைத்தல் உட்பட நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக 150 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், பொலிஸார் , பிரதேச அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் அபிவிருத்தி திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

புபுரஸ்ஸை நகரானது பல தசாப்தங்களாக அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்பட்டது. குடியேற்றங்கள் அதிகரித்தபோதிலும் நகரம் மேம்படுத்தப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் அனுராதா ஜயரத்வின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்தே நகரை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.










