புரட்சிகர கோஷங்களை எழுப்பும் கட்சிகள் அரசுடன் டீல்

ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருந்தாலும், பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்கின்றனர். இந்தப் பணத்தில் டீல் அரசியலும் கூட முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 251 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய தேசிய பாடசாலை வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 22 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்து வரும் போது பாராளுமன்றத்திலும் வெளியிலும் தன்மீது கோபத்தை வெளிப்படுத்தி குரோதம் காட்டுகின்றனர். நான் பிள்ளைகளுக்கு மது, போதைப்பொருள், சிகரெட்டை பகிர்ந்தளிக்கவில்லை. கணினிகள், அகராதிகளையே பகிர்ர்ந்தளிக்கிறேன். இவை தவறான விடயங்கள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள், தலைநகரின் ஆடம்பர குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட கும்பலுடன் டீலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நாட்டிலுள்ள சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயர் மட்டத்தை அடைவதை அவர்கள் விரும்பவில்லை. காலத்திற்கேற்ற நவீன கல்வியை வழங்காது, பழமைவாத கல்வியை வழங்குவதன் மூலம் இந்த பிள்ளைகளை அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புரட்சிகர கோஷங்களை எழுப்பும் கட்சிகள் அனைத்தும் தற்போது அரசாங்கத்துடன் டீலில் ஈடுபட்டுள்ளன. மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்து மக்களையே காட்டிக்கொடுக்கும் அரசியல் கலாச்சாரம் இந்நாட்டில் காலாகாலமாக இருந்து வருகிறது.

இந்நிலையை மாற்றியமைப்போம். பணத்துக்காக பிள்ளைகளையும் மக்களையும் ஏமாற்றி அவர்களின் கொள்கைகளை காட்டிக்கொடுக்கும் அரசியலும், டீல் அரசியலும் நாட்டில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நல்ல நல்ல அரசியல் டீல்களை எதிர்காலத்தில் கண்டுகொள்ளலாம். தமது சுய கௌரவத்துக்கு துரோகம் இழைத்து டீல் பேசும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பதில் அளிப்பார்கள் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles