தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
3 லட்சத்து 40 ஆயிரத்து 508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இதில் 85 ஆயிரத்து 440 மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் தோற்றியவர்களாவர்.
